Friday, March 23, 2007

அந்தப்புரங்களில்….

நினைவுகளில் சூலாகி
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் - எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்

எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நான்றுகொண்டு
பொழுதுக்கும்
வாழ்வோடு கண்ணாமூச்சி

குப்பையைக் கிளராமல்
துயிலை அடைக்காகவே
அமரும் இமைகள்

நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்

ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்

- அப்துல் ரகுமான் (பால்வீதி)

No comments: