Friday, March 9, 2007

கவியரங்கத்தில் கவிக்கோ

எனக்கொரு
சந்தேகம

உன்னை
எங்கள் மூச்சு
என்றார

அப்படியென்றால்
நாம் செத்துப்போனது
எப்படி?

உன்னை
வாங்கிய நாம்
பிறகு
விட்டு விட்டோமா?

மேல்வாய்
பிரசவித்த
மெல்லிய ஒலி
வளர்ந்து
பருவமுற்றபோது
பைந்தமிழே
நீ பிறந்தாய

முப்பதே
ஒலிகளுக்குள்
முழு உலகம்
அளப்பவளே
உன்னைப்போல்
எப்போதும்
உயிர் மெய்யோடு
இயங்குகின்ற மொழி எது?

குறிஞ்சியிலே
வாழைக்குமரியாய்
உதித்தவள

முல்லையிலே
மலர்ந்து
முழுமலராய்
சிரித்தவள

மருதத்தில்
போகத்தால்
மசக்கை
கொண்டவள


நெய்தலிலே
காவியங்கள்
நெய்தவள

ஈரமற்ற
பாறையிலும்
பூத்த மணிமலர

பாடயிலே
தேவர்களின்
பாடைகள்
போனபின்னும

உன் செய்
பாடயிலே
ஆடயிலே
படிப்படியாய்
வளர்ந்தவள

வாயின்
சுவாசமே
வயிறார
தித்திக்கும்
கனிச்சுவைய

எங்கள்
காதருந்தும்
கள்ள

எம்மொழி
செம்மொழி
எனக்கேட்டால

தலைநிமிர்ந்து
எம்மொழி
செம்மொழி
எனச்சொல்லும்
புகழ் கொடுத்தாய

செத்த மொழிகள்
இங்கு
சிம்மாசனம் ஏற
உயிர் மெய்யோடு
இருந்த உயர்ந்த
மொழி
தமிழ்மொழிக்கோ
தாமதமாகவே
செம்மொழி
சிம்மாசனம் கிடைத்தத

இதற்கு
தமிழன்
தூங்கி
கிடந்ததுதான்
காரணம

தான்
ஆடாவிட்டாலும்
பரவாயில்லை
தமிழ்
ஆடவேண்டும்
என்று
நினைக்கும்
கலைஞர்
இல்லையென்றால்
இதுகூட
நடந்திருக்காத

தமிழே
நீ
தீயாலே
கொஞ்சம்
தீந்தாய

கடல்
என்னும்
பேயாலே
பேரழிவை
பெற்றாய

கரையானின்
வாயாலே
கொஞ்சம்
கரைந்தாய

வத்தவந்த
அயல்மொழியின்
நோயாலே
நலம்
கெட்டு
நொந்தாய

இன்றோ
உன்
சேயாலே
சீரழிந்து
தேம்பி
அழுகின்றாய


தமிழே
உன்னிடத்தில்
உயிரெழுத்தை
கற்றோமே
உயிர் பெற்று எழுந்தோம

மெய்யழுத்தை
கற்றோமே
மெய்யெழுத கற்றோம

நீ
ஆயுதமும்
உயிர் என்றாய

அதை மறந்து
போனதனால்
பகைவர்களிடம்
தோற்றுவிட்டோம

பத்துப்பாட்டு
என்றால்
பதறுகிறோம்
திரைப்படத்தில்
குத்துப்பாட்டு
என்றால்
குதூகலமாய்
ஆடுகிறோம

எட்டுத்தொகை
பெற்று
இறுமாந்து
இருந்த
இனம்
சுற்றித்
தொகைக்கு
எல்லாம்
தொலைத்து
விட்டு
இருக்கின்றோம

அன்றோ
குரல் என்ற
உன்
ஈரடியை
வணங்கியது
உலகம

இன்றோ
யார் என்ற
விவஸ்தை கூட
இல்லாமல்
இனப்பகைவர்
காலடியில்
விழுவதுதான்
தமிழரின்
கலாச்சாரம்
உன்
சிலம்பம்
அதிகாரம்
செய்தது
அன்ற

இன்றோ
அதிகாரக்கால்களில்
சிலம்பாகி
கிடக்கிறான்
தமிழன

பரன்குணம்
படைத்த
பரம்பர

இன்று உன்னை
பரணிலே
போட்டுவிட்டு
பாதையெல்லாம்
நடக்கிறத

பிள்ளைத்தமிழ்
பேச பேரின்பம்
கொண்டவளே
இன்று
உன்
பிள்ளைகள்
பேசும் பேச்சிலே
நீ இல்ல

இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன

சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான

புலிக்கொடியை
பறக்கவிட்டு புகழோடு
வாழ்ந்தவன்தான

புலியென்று
சொன்னாலே
புலியமரம்
ஏறுகின்றான

மூதறிஞர்
தந்த
முப்பால்
இருக்

நாற்பால்
என்ற நச்சுப்பால்
குடிக்கின்றான

நெற்கொடியை
பறக்கவிட்ட
வீரன்தான

இந்த
வில்லுப்பாட்டு
பாடி
வீணர்களை
புகழுகின்றான

கங்கைகொண்டவன்தான்
இன்று
காவிரியையும்
இழந்துவிட்டு
கையை
பிசைந்து
நிற்கிறான

முப்படையால்
நான்கு
திசைகளையும்
வென்றவன

சாதி
சமயம்
கட்சி
என்ற
முப்படையால்
தோற்று
முகவரியை
இழந்துவிட்டான

தாய்ப்பாலுக்கு
அப்பால்
உன்
தனப்பாலை
குடித்ததொரு
ஒரு
வாய்ப்பால்
வளர்ந்தவன்
மகன

வஞ்சகப்
போதையின்
நோய்ப்பால்
அருந்தி
நூதனமாய்
சாகின்றான

உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்


அதனால்
உன்னை முதலாக
போட்டு வியாபாரம்
தொடங்கிவிட்டான

தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான

அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய

இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்ல

கோயிலுக்குள்ளே
நீ குடியேற
முடியவில்ல

வாயிலுக்கு
வெளியே
உன்னை
வைத்துவிட்டு
செல்கின்றார்
செருப்பை போ

வழக்காடு
மன்றத்தில்
குற்றவாளிகளுக்கு
கூட
கூண்டுகள்
உண்ட

நீ
நுழையமட்டும்
அனுமதியில்ல


அம்மா தாயே
என்னும்
பிச்சைகாரர்
வாயில்
மட்டும்தான்
நீ இருக்கின்றாய

தெருவெங்கும்
தமிழ் முழக்கம்
செழிக்கச்செய்வோம்
என்ற பாரதிய

உன் கனவை
நாங்கள்
நிறைவேற்றி
வைத்துவிட்டோம

வந்து பார்
இப்போது
தமிழ்
தெருவில்தான்
நிற்கிறத

தமிழனுக்கு
தேசிய
கீதமே
தாலாட்டுதான

மதம்
சாதி
திரைப்படம்
என்று
இவனுக்குதான்
எத்தனை
படுக்கைகள

தமிழன்
ஒன்று
கும்பகர்ணனாக
இருக்கிறான்
இல்லையென்றால்
வீடணாக
இருக்கிறான

இளைஞனிடம்
விழிப்புணர்ச்சி
வேண்டுமென்றால

நாங்கள்தான்
பெண்களை
கண்டால்
விழி புணர்ச்சி
செய்கிறோமே
என்கிறான

தமிழன்
விழித்திருக்கும்
போது கூட
திரைப்பட அரங்குகள்
என்ற இருட்டறையிலேயே
இருக்கின்றான

இவனுக்கு
பெரியதிரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீட

இந்த வீடுபேற்றிற்காக
இவன்
அறத்தையும்
இழந்துவிட்டான்
பொருளையும்
இழந்துவிட்டான

அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்
முகமிழந்தான

தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான

எனக்கு
வீடெங்கே
வினையெங்க

எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்க

இன உணர்வு

பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்க

உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனத

இந்த
நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள

தமிழா
விழித்துக்கொள
இல்லையென்றால்
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை
உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்...

3 comments:

saravana said...

மிக அருமையான கவிதை ......

http://aadaillathavarigal.blogspot.com/

ஆத்தூர் சாகுல் said...

சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை!

ஆத்தூர் சாகுல் said...

இவனுக்கு
பெரிய திரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீடு